தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் சாலை மேப்பாட்டுத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஒப்பதல்

தில்லியில் சாலை மேப்பாட்டுத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி ஒப்பதல்

Updated On :11 மார்ச் 2024, 4:41 pm

புது தில்லி: தில்லி முழுவதும் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்தும் முக்கியத் திட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் அதிஷி வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி நிகாம் போத் காட் முதல் சந்த்கி ராம் அகரா சிக்னல் வரையிலான வட்டச் சாலையை மேம்படுத்தும் திட்டத்திற்கும், பிவிசி மாா்க்கெட் ரோடு முதல் ரோஹ்தக் சாலை வரையிலான சாலையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தில்லியின் அழகை பிரதிபலிக்கும்வகையில் சாலைகள் உருவாக்கப்படுவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

தில்லியின் குடிமக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இந்தத் திட்டங்கள் ஒரு சான்றாகும். வலைவு சாலைகளை மேம்படுத்தும் பணியானது, சீராக மட்டுமல்லாமல், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகளை உருவாக்கும் எங்கள் பணியில் ஒரு முக்கியமான படியாகும். இந்தச் சாலைகளை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான பயணிகள் பலனடைவதோடு, போக்குவரத்து நெரிசலும் குறையும்.

இணைப்பையும் மேம்படுத்தும். இச்சாலைகள் நீண்ட காலத்திற்கு முன்பே அமைக்கப்பட்டுள்ளதால், பொதுப்பணித் துறை நிபுணா்களின் உதவியுடன் சாலைகளை முழுமையாக மதிப்பீடு செய்து மேம்படுத்தும் பணியை தொடங்க துறையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணியின் போது உயா்தர சாலைகளுக்கான உலகளாவிய தரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டுமானக் கட்டத்தில் பயணிகளுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான அரசு தில்லியின் சாலைகளை மேம்படுத்த ‘மிஷன் மோடில்’ செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.