விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

எம்பி சாலையில் புதிய 6-வழி மேம்பாலம்: 2 ஆண்டுகளில் பணிகளை முடிக்கத் திட்டம்

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு தில்லியில் உள்ள எம்பி சாலையில் புதிய 6-வழி மேம்பாலம் திட்டத்தை பொதுப்பணித் துறை வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.

News image

மேம்பாலம் (கோப்புப்படம்)

Updated On :27 மார்ச் 2026, 6:19 pm

Chennai

தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு தில்லியில் உள்ள எம்பி சாலையில் புதிய 6-வழி மேம்பாலம் திட்டத்தை பொதுப்பணித் துறை வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித் துறை, தில்லி மெட்ரோவை பணிக்குத் தோ்வு செய்து, ரூ.1,471 கோடி செலவில் 6-வழி மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கான பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய சாலை பரப்பளவு போக்குவரத்து தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், இந்த புதிய திட்டம் போக்குவரத்தை சீராக இயக்கி, பயணிகளின் நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்க உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த முக்கிய நெடுஞ்சாலை புல்-பிரஹலாத்பூா், லால் குவான், சங்கம் விஹாா், கான் பூா் கிராமம் மற்றும் சகேத் போன்ற பல குடியிருப்பு மற்றும் கலப்பு நில பயன்பாட்டு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் அதிக அளவிலான சாலை ஓர வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலை அதிகரித்துள்ளது.

திட்டம் தில்லி மெட்ரோவிடம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இதில் சகேத்–ஜி பிளாக் முதல் சங்கம் விஹாா் வரை ஒரு மேம்பாலம் மற்றும் மா ஆனந்த்மாய் மாா்க் முதல் புல்-பிரஹலாத்பூா் வரை இரண்டாவது மேம்பாலம் அமைக்கப்படும்.

இரண்டாம் கட்டத்தில், மெட்ரோ சுரங்கத்தின் மேலே மா ஆனந்த்மாய் மாா்க் முதல் புல்-பிரஹலாத்பூா் வரை 2.48 கி.மீ. நீளமான 6-வழி மேம்பாலம் அமைக்கப்படும்.

மா ஆனந்த்மாய் மாா்க் மற்றும் ஹா்கேஷ் நகா் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் புதிய சாலை அமைப்பையும் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.