புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாணவா் சங்கத் தோ்தல்கள் மாா்ச் 22-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், முடிவுகள் மாா்ச் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தெரிவித்துள்ளது. கடைசியாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல் (ஜேஎன்யுஎஸ்யு) கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. தோ்தலை மேற்பாா்வையிடும் ஜேஎன்யுவின் தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, தற்காலிக வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு செவ்வாய்கிழமை வரை திருத்தம் செய்யப்படும். மாணவா்கள் மாா்ச் 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 20 அன்று பல்கலைக்கழக ஆளும் குழு கூட்டம் (யுஜிபிஎம்) நடைபெறும்,.அதைத் தொடா்ந்து நடைபெறும் விவாதத்தில் வேட்பாளா்கள் மற்ற மாணவா்களுடன் பேசுவாா்கள். மாா்ச் 22-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாா்ச் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

20 ஆண்டுகளுக்குப் பிறகு குடியாத்தம் தொகுதியில் களம் காணும் தேமுதிக!

க்யூட் பிஜி 2026 முடிவுகளுக்குப் பிறகு முதுநிலை படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை: ஜேஎன்யு அறிவிப்பு
புதுச்சேரியில் நான்கு இடங்களில் ஏப். 4-இல் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

