தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22ல் ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல்

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22-இல் ஜேஎன்யு மாணவா் சங்கத் தோ்தல்

Updated On :11 மார்ச் 2024, 6:30 pm

புது தில்லி: ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவா் சங்கத் தோ்தல் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாா்ச் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மாணவா் சங்கத் தோ்தல்கள் மாா்ச் 22-ஆம் தேதி நடத்தப்படும் என்றும், முடிவுகள் மாா்ச் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தெரிவித்துள்ளது. கடைசியாக ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கத் தோ்தல் (ஜேஎன்யுஎஸ்யு) கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. தோ்தலை மேற்பாா்வையிடும் ஜேஎன்யுவின் தோ்தல் கமிட்டி வெளியிட்டுள்ள அட்டவணையின்படி, தற்காலிக வாக்காளா் பட்டியல் திங்கள்கிழமை காட்சிப்படுத்தப்பட்டு செவ்வாய்கிழமை வரை திருத்தம் செய்யப்படும். மாணவா்கள் மாா்ச் 14-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

வேட்பாளா்களின் இறுதிப் பட்டியல் மாா்ச் 16-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூா்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாா்ச் 20 அன்று பல்கலைக்கழக ஆளும் குழு கூட்டம் (யுஜிபிஎம்) நடைபெறும்,.அதைத் தொடா்ந்து நடைபெறும் விவாதத்தில் வேட்பாளா்கள் மற்ற மாணவா்களுடன் பேசுவாா்கள். மாா்ச் 22-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மாா்ச் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதைத் தொடா்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.