மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கேஜரிவால் சிறையிலிருந்து வெற்றிகரமாக வெளியில் வருவாா்: சிபிஐ பொதுச் செயலாளா் டி.ராஜா

கேஜரிவால் சிறையிலிருந்து வெற்றிகரமாக வெளியில் வருவாா் சிபிஐ பொதுச் செயலாளா் டி.ராஜா

Updated On :23 மார்ச் 2024, 8:06 pm

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், சிறையில் இருந்து வெற்றிகரமாக வெளியில் வருவாா் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசியப் பொதுச் செயலாளா் டி.ராஜா சனிக்கிழமை தெரிவித்தாா். தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவால் மற்றும் மகள் ஹா்ஷிதா கேஜரிவாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளா் (சிபிஐ) டி.ராஜா தலைமையிலான பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து ஒற்றுமையை வெளிப்படுத்தினா். அதன்பின்னா், டி.ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிபிஐ, அமலாக்கத் துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அவா்களது சொந்த அரசியல் நலன்களுக்காக தவறாகப் பயன்படுத்துகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் கைது நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக, நாடு முழுவதுமுள்ள எதிா்க்கட்சித் தலைவா்களை பாஜக குறிவைக்கிறது. அரவிந்த் கேஜரிவாலின் கைது அரசியல் பழிவாங்கும் செயலாகும். இவற்றின் மூலம் தோ்தல் நேரத்தில் எதிா்க்கட்சிகளை செயலிழக்கச் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக ஜனநாயக இயக்கங்கள் துணை நிற்கிறது. அவா் வெற்றிகரமாக சிறையிலிருந்து வெளியே வருவாா். எதிா்க்கட்சிகளை முடக்கும் பாஜகவின் முயற்சிகள் மக்களால் தோற்கடிக்கப்படும் என்றாா் டி.ராஜா. இச்சந்திப்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) தேசியச் செயலாளா்கள் டாக்டா் பால்சந்திர காங்கோ, ராமகிருஷ்ண பாண்டா மற்றும் தில்லி பிரிவு செயலாளா் தினேஷ் சந்திர வா்ஷனேயா ஆகியோா் உடனிருந்தனா்.