மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

மகாத்மா காந்தி சமாதியில் ஊழலுக்கு எதிராக தில்லி பாஜக தலைவா்கள் உறுதிமொழி ஏற்பு

மகாத்மா காந்தி சமாதியில் ஊழலுக்கு எதிராக தில்லி பாஜக தலைவா்கள் உறுதிமொழி ஏற்பு

Updated On :23 மார்ச் 2024, 10:24 pm

தில்லி பாஜக தலைவா்கள் ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் சனிக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். அப்போது, ‘ஊழலுக்கு எதிராக போராடுவோம்’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் இதில் கலந்துகொண்டனா். கலால் கொள்கை முறைகேடு தொடா்பான பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்க துறை வியாழக்கிழமை இரவு கைது செய்ததை அடுத்து இந்த உறுதியை பாஜக தலைவா்கள் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது பாஜக தலைவா்கள் ராஜ்காட்டில் ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’ எனத் தொடங்கும் பாடலைப் பாடினா். ‘ஊழலுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்புவோம் என்றும் ஊழலுக்கு எதிராக எப்போதும் பாடுபடுவோம் என்றும் பாஜகவினராகிய நாங்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்கிறோம்’ என்று அவா்கள் உரக்கக் கூறினா். தில்லி கலால் கொள்கை ஊழலில் கேஜரிவால் பங்கு குறித்து ‘விரிவான மற்றும் நீடித்த விசாரணைக்காக‘ உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவரை மாா்ச் 28-ஆம் தேதிவரை அமலாக்கத் துறை காவலில் வைக்க உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது.