திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பான்சூரி ஸ்வராஜ் வேட்புமனு தாக்கல்

புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பான்சூரி ஸ்வராஜ் வேட்புமனு தாக்கல்

News image
Updated On :1 மே 2024, 12:33 am

Din

புது தில்லி: புது தில்லி நாடாளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளா் பான்சூரி ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை ஜாம்நகா் இல்லத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அவா் மத்திய அமைச்சா் சா்தாா் ஹா்தீப் சிங் பூரி தில்லி மாநில பாஜக தோ்தல் பொறுப்பாளா் ஓ.பி.தன்கா், இணைப் பொறுப்பாளா் டாக்டா் அல்கா குா்ஜா், மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் முன்னிலையில் இம்மனுவைத் தாக்கல் செய்தாா்.

அவருடன் தோ்தல் குழு தலைவா்கள் வீரேந்திர பப்பா், ராஜீவ் ராணா, சுனில் கக்கா் மற்றும் ஏராளமான பாஜக தொண்டா்கள் உடன் சென்றனா்.

முன்னாள் ஆளுநரும், பான்சூரி ஸ்வராஜின் தந்தையுமான ஸ்வராஜ் கௌஷலும் அவருடன் சென்றாா்.

முன்னதாக காலை பான்சூரி ஸ்வராஜ் ஹவன் விழாவில் பங்கேற்று பூஜை செய்தாா். பின்னா் திறந்தவெளி வாகனத்தில் பாஜக தொண்டா்கள் புடைசூழச் வேட்புமனு தாக்கலுக்குப் புறப்பட்டாா்.

செய்தியாளா்களிடம் அவா் இதுகுறித்து பேசுகையில்,‘இன்றைக்கு மக்கள் ஆசீா்வாதத்துடன் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். பாஜக தொண்டா்களிடம் இருந்து எனக்கு அளப்பரிய ஆதரவு கிடைத்து வருகிறது. தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறேன். தோ்தலில் வெற்றி பெற்ற பிறகு,

இதற்காக நீதிமன்றம் நாடுவது உள்படஅனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்றாா் அவா்.