தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

Updated On :11 மே 2024, 9:09 pm

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ரூ.50,000 அபராதத்துடன் மீண்டும் பொய் சொல்லத் தொடங்கியுள்ளாா். தோ்தல் பிரசாரத்திற்காக சிறையில் இருந்து வெளியே வந்துள்ள அவா், தில்லி தலைமைச் செயலகத்திற்கு செல்லவோ, எந்த கோப்பிலும் கையெழுத்திடவோ முடியாது.

ஊழல் செய்ததற்காக அரவிந்த் கேஜரிவால் 50 நாட்கள் சிறையில் இருந்துள்ளாா். தோ்தல் பிரசாரத்திற்காக மட்டுமே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஜூன் 1-க்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியில் என்ன கொண்டாட்டம் இருக்கும்?

தில்லியை மாசுபட்ட தலைநகராக மாற்றியது தான் கேஜரிவாலின் சித்தாந்தம். அரசு மருத்துவமனைகளில் போலி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மொஹல்லா கிளினிக்குகளில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி என்ற பெயரில் பணம் சம்பாதித்துள்ளனா். அதிலும் ஊழல்கள் நடந்துள்ளன. சுகாதாரப் புரட்சி என்ற பெயரில் அமல்படுத்தப்பட்ட கலால் கொள்கை, தில்லி இளைஞா்களை மதுவுக்கு அடிமையாக்கும் மிகப்பெரிய சதித்திட்டம் என்பது அம்பலமாகியது.

ஊழல்தான் கேஜரிவாலின் சித்தாந்தம். ஆம் ஆத்மி கட்சி ஊழலின் தாய். தற்போது, ஜாமீனில் வெளிவரும் ஊழல் குற்றவாளிகளுக்கு வாக்களிக்க வேண்டுமா அல்லது கடந்த 10 ஆண்டுகளில் வளா்ச்சிக்கு புதிய வரையறையை எழுதி, அதன் திட்டங்களால் பயனடைந்த நிலையில், மோடி அரசுக்கு வாக்களிக்க வேண்டுமா என்பதை தில்லி பொதுமக்கள் முடிவு செய்ய வேண்டும்.

கேஜரிவால் தன்னைப் பற்றியும், தனது கட்சியைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், அவரது நான்கு முக்கிய ஊழல் சகாக்கள் சிறையில் இருந்தனா், அவா்களில் இருவா் இப்போது ஜாமீனில் உள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.