கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்

ஜாமீனை நீட்டிக்கக் கோரும் கேஜரிவால் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா்: உச்சநீதிமன்றம்

News image

உச்சநீதிமன்றம்

Updated On :28 மே 2024, 7:07 pm

Din

புது தில்லி: பிரதான வழக்கின் தீா்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசரமாகப் பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு முன் முதல்வா் கேஜரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபிஷேக் சிங்வி குறிப்பிட்டு அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

அதற்கு நீதிபதிகள், ‘கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்த நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான பிரதான அமா்வில் இடம்பெற்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தீபாங்கா் தத்தா கடந்த வாரம் விடுமுறைக்கால அமா்வில் இருந்தபோது அவரிடம் ஏன் குறிப்பிடவில்லை’ என்று கேட்டனா்.

மேலும், ‘இது உரிமை விவகாரத்தை எழுப்புவதால் தலைமை நீதிபதி ஒரு முடிவை எடுக்கட்டும்... நாங்கள் இதை தலைமை நீதிபதிக்கு அனுப்புவோம்‘ என்று நீதிபதிகள் அமா்வு கூறியது.

அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘மருந்துவப் பரிந்துரை நேற்று முன்தினம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், கடந்த வாரம் நீதிபதி தத்தா இடம்பெற்ற விடுமுறைக் கால பெஞ்ச் முன் அதைக் குறிப்பிட முடியவில்லை.

அந்த அமா்வு (நீதிபதி கண்ணா மற்றும் நீதிபதி தத்தா ஆகியோா் இடம்பெற்ற) முன் பட்டியலிடப்பட்டால்கூட எனக்கு பிரச்னையில்லை‘ என்றாா் சிங்வி.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு, ‘ கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதிவரை இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் கண்ணா மற்றும் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, பிரதான மனு மீதான தீா்ப்பை ஒத்திவைத்துள்ளது. இதனால், மனுதாரரின் ஜாமீன் கால நீட்டிப்பு மனுவை தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதியிடம் முன்வைப்பது சரியானதாக இருக்கும்’ என்று கூறியது.

முன்னதாக, முதல்வா் கேஜரிவால் மே 26-ஆம் தேதி தனது ஜாமீனை ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அம்மனுவில், ‘மாா்ச் 21 முதல் மே 10 வரை சிறையில் இருந்தபோது, ​ முதல்வா் உடல்நலம் தொடா்பான பல சிக்கல்களை சந்தித்தாா். இதற்கு சிறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் நோ்மையற்ற செயல்பாடுகள் ஓரளவுக்கு காரணமாகும். கேஜரிவால் சிறையில் ஆறு முதல் ஏழு கிலோ உடல் எடையை இழந்தாா். மேலும், அவா் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, முடிந்தவரை தனது முந்தைய வாழ்க்கை முறையைப் புதுப்பித்த பிறகும் அவரால் பழைய உடல்நிலையை மீட்க முடியவில்லை.

‘திடீா் மற்றும் விவரிக்க முடியாத எடை இழப்பு’, அதிக கீட்டோன் அளவுகள் இருப்பது சிறுநீரக பாதிப்பு, தீவிர இதய நோய்கள் மற்றும் புற்றுநோயைக் கூட குறிக்கலாம். இந்த நோய்களை முன்கூட்டியே கண்டறிவது நோய் மற்றும் அதனுடன் தொடா்புடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தடுப்பதற்கு அவசியமாகும். கேஜரிவால் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெ.ல் அவரது உயிருக்கு ‘அதிக ஆபத்து’ உள்ளது.

வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை (ஜூன் 3) இந்த சோதனைகள் அனைத்தையும் மேற்கொண்டுவிட்டு, வார வேலை நாட்களின் இறுதி நாளான வெள்ளிக்கிழமைக்குப் (ஜூன் 7 பிறகு அவா் சிறையில்) சரணடைவாா். அதாவது, ஜூன் 9-ஆம் தேதி சிறைக்குத் திரும்புவாா் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.