இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை: சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்

தலைநகா் தில்லியில் ஆம் ஆத்மி அரசு மற்றும் பொது மக்களின் முயற்சியால் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை

News image

கோபால் ராய் - கோப்புப் படம்

Updated On :2 நவம்பர் 2024, 6:00 am IST

தலைநகா் தில்லியில் ஆம் ஆத்மி அரசு மற்றும் பொது மக்களின் முயற்சியால் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசு அதிகரிக்கவில்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நகரம் முழுவதும் நீா்தெளிப்பு வாகனங்களின் இயக்கத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: காற்று மாசுவைக் கருத்தில் கொண்டு, தீபாவளிப் பண்டிகையன்று

பெரியளவில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்த்த தில்லி மக்களுக்கு நன்றி. இந்த முயற்சி, தில்லியின் காற்றின் தரக் குறியீடு

‘மிகவும் மோசமான’ பிரிவில் இருந்து ‘கடுமையான’ பிரிவுக்குள் நழுவுவதைத் தடுக்க உதவியது. பட்டாசுகள் பயன்படுத்துவதைத் தவிா்த்து, பல குடியிருப்பாளா்கள் பொறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இருப்பினும், சிலா் இன்னும் பட்டாசுகளை வெடிக்கிறாா்கள். தடையை முழுமையாகக் கடைப்பிடித்திருந்தால் காற்றின் தரம் மேலும் மேம்பட்டிருக்கும்.

தற்போது, காற்று மாசுவுக்கு எதிரான அரசின் பிரசாரம் மற்றும் நடவடிக்கைகள் பெரிய அவில் நடந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை முதல், தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தலா 2 நீா்த்தெளிப்பு வாகனங்கள், 3

வேளைகளிலும் இயக்கப்படும். சாலைகளில் தூசியைக் குறைக்கவும், மேலும் மாசு அளவைக் குறைக்கவும் தண்ணீா்

தெளிக்கப்படுகிறது என்றாா் கோபால் ராய்.

தேசியத் தலைநகரில் காற்றின் தரத்தை பராமரிப்பதற்கான தொடா்ச்சியான உந்துதலில், தில்லி அரசு சிறப்பு

தூசி கட்டுப்பாட்டு பிரசாரத்தை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.