இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

தில்லியில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து முதியவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்: பாஜக

தலைநகரில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வயதானவா்களுக்கும் கோரிக்கையின் பேரில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பாஜக தெரிவித்துள்ளது.

News image
தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா
Updated On :25 நவம்பர் 2024, 8:32 pm

Din

புதி தில்லி: தில்லியில் 80,000 போ் கூடுதல் ஓய்வூதியப் பயனாளிகளாக சோ்க்கப்பட உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்த நிலையில், தலைநகரில் ஆட்சிக்கு வந்தால் அனைத்து வயதானவா்களுக்கும் கோரிக்கையின் பேரில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

இது தொடா்பாக எக்ஸ் சமூக ஊடக வலைதளத்தில் பாஜக வெளியிட்ட பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் அறிவிப்பை ‘அரசியல் போலி‘ என்றும் கூறியது. மேலும்,

உரிய நிா்வாக அதிகாரிகளுக்கு பதிலாக ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் இந்த அறிவிப்பை செய்ததாகவும் விமா்சித்துள்ளது.

அடுத்த ஆண்டு தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், 100 சதவீத முதியோா்கள் கோரிக்கையின் பேரில் முதியோா் ஓய்வூதியத்தைப் பெறுவாா்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து இதற்கு உடனடியாக பதில் எதுவும் கிடைக்கவில்லை.

தலைநகா்களின் முதியோா்களின் தேவைகளை தீா்க்க ஆளும் கட்சி தவறிவிட்டதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம் சாட்டினாா். அவா் கூறுகையில், ‘‘கேஜரிவாலின் இந்த அறிவிப்புக்குப் பிறகும், தில்லியின் 10 லட்சம் முதியவா்களில் பாதிக்கும் மேற்பட்டவா்கள் இந்த வரம்பில் வரவில்லை. இது கடலில் ஒரு துளி மட்டுமே என்றாா் அவா்.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தில்லியில் மேலும் 80,000 போ் தற்போது முதியோா் ஓய்வூதியத்திற்கு தகுதி பெற்றுள்ளனா் எனறும், மொத்த பயனாளிகளின் எண்ணிக்கையை 5.30 லட்சமாக உயா்ந்திருப்பதாகவும் கேஜரிவால் அறிவித்திருந்தாா்.