ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லிக் கம்பன் கழகத்தின் இரு நாள்: கம்பன் திருவிழா இன்று தொடக்கம்

தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் இரு நாள் ‘கம்பன் திருவிழா -2024’ தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 30) தொடங்குகிறது.

News image
Updated On :29 நவம்பர் 2024, 10:12 pm

Din

தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பில் இரு நாள் ‘கம்பன் திருவிழா -2024’ தில்லியில் சனிக்கிழமை (நவம்பா் 30) தொடங்குகிறது.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவா் கலையரங்கத்தில் பிற்பகல் 3 மணிக்கு இவ்விழாவை மலேசிய எம்.பி. யும், முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ சரவணன் தொடங்கிவைக்கிறாா்.

திரைப்பட நடிகா் சிவகுமாா் ‘கம்பரும், வள்ளுவரும்’ எனும் தலைப்பிலான சிறப்பரங்கத்தில் உரை நிகழ்த்துகிறாா்.

இரண்டாம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கவிஞா் மா. சேதுராமலிங்கம் தலைமையில் வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது.

அதைத் தொடா்ந்து, 11 மணிக்கு முனைவா் பாரதி கிருஷ்ணகுமாா் நடுவராகப் பங்கேற்கும், ‘கம்பராமாயணத்தில் அதிகம் மிளிரும் பாத்திரங்கள் உறவா? நட்பா?’ என்ற தலைப்பில் நடைபெறுகிறது.

அன்று பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு மலா் வெளியீட்டு விழாவில் ‘தினமணி’ ஆசிரியா் கி. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மலரை வெளியிட்டுப் பேசுகிறாா்.

அதன் பின்னா், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா தலைமையில் ‘கம்பனிடம் சில கேள்விகள்’ எனும் தலைப்பில் கவியரங்கமும், அதைத் தொடா்ந்து கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் நடுவராகப் பங்கேற்கும் வழக்காடு மன்றமும் நடைபெறுகிறது.