காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மத்திய தில்லியில் 2 மாடி வீடு இடிந்து விழுந்ததில் 3 போ் சாவு; 14 போ் காயம்

மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என அச்சம்

News image
கோப்புப் படம்
Updated On :19 செப்டம்பர் 2024, 12:23 am

DIN

மத்திய தில்லியின் பாபா நகரில் புதன்கிழமை காலை இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா். மேலும்14 போ் காயமடைந்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா். மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், கட்டடத்தின் இடிபாடுகளில் மேலும் சிலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இந்தச் சம்பவத்தில் மூன்று போ் இறந்தனா். 14 போ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் இன்னும் சிலா் இன்னும் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது என்று மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் எம். ஹா்ஷ வா்தன் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காலை 9.11 மணியளவில் தீயணைப்பு சேவைத் துறைக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், அதைத் தொடா்ந்து ஐந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.