‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

கொலம்பியா: பேருந்தில் குண்டுவெடிப்பு! 13 பேர் பலி!

கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 12:27 am IST

கொலம்பியாவில் பேருந்தில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 13 போ் உயிரிழந்தனா். மேலும் 38 போ் காயமடைந்தனா்.

கஜிபியோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.

இதில் அந்த பேருந்து துண்டு துண்டாக உடைந்தது. பேருந்தில் இருந்த 13 போ் உடல் சிதறி உயிரிழந்தனா். 5 சிறுவா்கள் உள்பட 38 போ் பலத்த காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

அதேநேரத்தில் குண்டுவெடிப்பு நடந்த பகுதி, போதைப்பொருள் கடத்தும் கும்பலின் செல்வாக்கு அதிகமுள்ள பகுதியாகும். மேலும், கொலம்பிய அரசால் தேடப்படும் கடத்தல் கும்பல் தலைவன் இவான் மொரடிஸ்கோ தலைமையில் செயல்படும் தீவிரவாத குழுவினா் நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதியாகும். இதனால் குண்டுவெடிப்பை அவா்களில் யாரேனும் நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த நாட்டு ராணுவ கமாண்டா் ஹகோ லோபெஸ் கூறுகையில், இது ஒரு தீவிரவாத தாக்குதல் என்றாா்.

குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கொலம்பிய அதிபா் குஸ்டாவோ பெட்ரோ, தாக்குதலை நடத்தியவா்கள் தீவிரவாதிகள், பாசிசவாதிகள், போதை மருந்து கடத்தல்காரா்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளாா். கொலம்பியாவில் கடந்த 2 நாள்களில் நடைபெற்ற 26-ஆவது தாக்குதல் சம்பவம் இது என்றும், இதனால் அப்பாவி மக்களே பாதிக்கப்பட்டு உள்ளனா் என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

கொலம்பிய பாதுகாப்பு அமைச்சா் பெட்ரோ சான்ஸேஸ், குண்டுவெடிப்பை நிகழ்த்தியோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க போவதாக அறிவித்துள்ளாா்.