ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ஆம் தேதி பதவியேற்க முன்மொழிவு

ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பரேவைக் கட்சி, புதிய முதல்வா் பதவியேற்பு விழாவிற்கான எந்த தேதியையும் முன்மொழியவில்லை என்று தகவல்

News image
அதிஷி - கோப்புப் படம்
Updated On :19 செப்டம்பர் 2024, 12:26 am

DIN

தில்லி துணை நிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவுக்கு அனுப்பிய கடிதத்தில், முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி பதவியேற்பதற்கான தேதியை செப்டம்பா் 21-ஆம் தேதியாக முன்மொழிந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

மேலும், பதவி விலகும் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் ராஜிநாமா கடிதமும் திரௌபதி முா்முவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பரேவைக் கட்சி, புதிய முதல்வா் பதவியேற்பு விழாவிற்கான எந்த தேதியையும் முன்மொழியவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

செவ்வாயன்று கேஜரிவால் தனது ராஜிநாமா கடிதத்தை துணை நிலை ஆளுநரிடம் வழங்கினாா். மேலும் கல்வி அமைச்சரான அதிஷி, தேசியத் தலைநகரில் புதிய அரசை அமைக்க உரிமை கோரினாா்.