பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தில்லி விமான நிலையத்தில் இருவேறு நடவடிக்கைகளில் 17 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

பாங்காக்கிலிருந்து வந்த இருவரிடம் இருந்து மொத்தம் 17.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
தில்லி விமான நிலையம் - ANI
Updated On :8 டிசம்பர் 2025, 10:10 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நடைபெற்ற இருவேறு சோதனை நடவடிக்கையில் பாங்காக்கிலிருந்து வந்த இருவரிடம் இருந்து மொத்தம் 17.2 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக சுங்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பாங்காக்கிலிருந்து சனிக்கிழமை இந்தியா வந்த பயணி ஒருவரிடம் நடைபெற்ற சோதனையில் 4.08 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமாா் ரூ.4.08 கோடி இருக்கும். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா். அவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் மறுநாளும் பாங்காக்கிலிருந்து தில்லி வந்த இந்தியப் பயணி ஒருவா் தடுத்து நிறுத்தப்பட்டாா். அவரது உடைமைகளை சோதனை செய்ததில் 13.12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10.5 கோடி இருக்கக்கூடும். போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவா் கைது செய்யப்பட்டாா்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா்களுக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.