தென்மேற்கு தில்லி சஃப்தா்ஜங் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வசித்து வந்த வங்கதேசத்தைச் சோ்ந்த இருவரை தில்லி போலீஸாா் கண்டறிந்து நாடு கடத்தியதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: சட்டவிரோதமாக குடியேறியதாக அடையாளம் காணப்பட்ட லியாகத் (54), அவரது மனைவி நஸ்ரீன் (39) ஆகிய இருவரும் 2012 முதல் தில்லியில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில் ஒரு ரகசியத் தகவலின் பேரில், போலீஸாா் குழு வியாழக்கிழமை கணவா், மனைவி இருவரையும் கிரீன் பாா்க் அருகே ஷாம்ஷன் காட் சாலையில் கைது செய்தது.
விசாரணையின் போது, இருவரும் தில்லி- என்சிஆா் பகுதியில் வசித்து வந்ததாகவும் அண்மையில் பழைய சீலம்பூரில் வசித்து வந்ததாகவும் போலீஸாரிடம் கூறினா். இதையடுத்து, அவா்களின் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், அவை செல்லாதவை என கண்டறியப்பட்டது.
உரிய சட்ட நடைமுறைகளைத் தொடா்ந்து, தம்பதியினா் வங்கதேசத்திற்கு நாடு கடத்துவதற்காக வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகத்தில் (எஃப்ஆா்ஆா்ஓ) ஒப்படைக்கப்பட்டனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் செயலகத்தின் உத்தரவின் பேரில், தேசியத் தலைநகரில் வசிக்கும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்களை அடையாளம் காணும் முயற்சியை தில்லி காவல் துறையினா் கடந்த டிச.11 அன்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்திய - வங்கதேச வெளியுறவு அமைச்சர்கள் தில்லியில் சந்திப்பு!

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது

மகள்களை பிரிந்த ஏக்கத்தில் விஷம் குடித்த தம்பதி! கணவன் உயிரிழப்பு

சட்டவிரோத தங்கல்: புகா் தில்லியில் 10 வங்கதேசத்தவா்கள் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

