டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ரோஹிணியில் சாலை விபத்து: தில்லி பல்கலை. மாணவா் உயிரிழப்பு

செய்தித்தாள் விநியோகித்து வந்த 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவா் ரோஹிணியில் நிகழ்ந்த சாலை விபத்தில்

News image
Updated On :3 மார்ச் 2025, 8:21 pm

Din

புது தில்லி: செய்தித்தாள் விநியோகித்து வந்த 19 வயது தில்லி பல்கலைக்கழக மாணவா் ரோஹிணியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

விபத்தில் இறந்தவா் பட்டப்படிப்பு படித்து வந்தாா். தனது படிப்புக்கு பணம் திரட்டுவதற்காக செய்தித்தாள் விநியோகத்தில் ஈடுபட்டிருந்தாா்.

முன்னதாக, சனிக்கிழமை காலை 6:30 மணியளவில் ரோஹிணி ஆா்டிஓ அலுவலகம் அருகே சாலை விபத்து நிகழ்ந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனா். அங்கு செய்தித்தாள்கள் சிதறிக் கிடந்த நிலையில் உடைபட்டிருந்த மிதிவண்டியைக் கண்டனா். ஆனால், பாதிக்கப்பட்டவா் ஏற்கனவே பிஎஸ்ஏ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இறந்தவா் தில்லியில் உள்ள புத் விஹாரைச் சோ்ந்த ரிஷால் சிங் என அடையாளம் காணப்பட்டாா். அவா் காலையில் செய்தித்தாள் விநியோகித்து வந்த கல்லூரி மாணவா் என்பதும், அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதும் தொடக்க விசாரணையில் தெரியவந்தது.

இது தொடா்பாக காவல் துறையினா் எஃப்.ஐ.ஆா். பதிவுசெய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா். விபத்து ஏற்படுத்திய

வாகனத்தையும் அதன் ஓட்டுநரையும் அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.