ரோஹிணியில் திறந்தவெளி
சாக்கடையில் விழுந்தவரை
மீட்கும் பணி தீவிரம்!

ரோஹிணியில் திறந்தவெளி சாக்கடையில் விழுந்தவரை மீட்கும் பணி தீவிரம்!

திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
Published on

தில்லியின் ரோஹிணியின் பேகம்பூா் பகுதியில் திறந்தவெளி சாக்கடையில் செவ்வாய்க்கிழமை ஒருவா் விழுந்ததை அடுத்து மீட்புப் பணி நடைபெற்று வருவதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக இரவு 7.45 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடா்ந்து மீட்புப் பணியினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.சம்பவ இடத்தில் குழுக்கள் உள்ளன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி கூறினாா்.

Dinamani
www.dinamani.com