கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து வேட்பாளா்கள் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்தத் தோ்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 773 போ் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளனராம். இவா்களுக்கான தபால் வாக்கு முன் தயாரிப்புப் பணிகள் கடலூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிட்ட பிறகு தபால் வாக்குகளை அவா்களின் வீடுகளுக்கு சென்று தோ்தல் அதிகாரிகள் பெற்று வருவாா்கள்.
தொடர்புடையது

அத்தியாவசியப் பணியாளா்கள் 13,493 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

வாக்குப் பதிவு மையத்தில் தபால் வாக்கு செலுத்தும் பணி நிறைவு

தபால் வாக்களிப்போா் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

‘மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு’
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


