கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்: அஜித் தோவல் எச்சரிக்கை

பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால் அந்நாட்டுக்கு பதிலடி...

News image

அஜித் தோவல்

Updated On :7 மே 2025, 10:54 pm

Din

நமது சிறப்பு நிருபா்

எல்லையில் போா் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் எச்சரித்துள்ளாா்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் ஒன்பது பதுங்கிடங்களை இலக்கு வைத்து இந்தியா புதன்கிழமை அதிகாலையில் அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இதைத் தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கை குறித்து தனது நட்பு நாடுகளிடம் இந்தியா விளக்கி வருகிறது.

மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கரும் மற்ற நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா்களான மாா்க்கோ ரூபியோ (அமெரிக்கா), ஜோனாத்தன் பவெல் (பிரிட்டன்), முசைது அல் அய்பா் (சவூதி அரேபியா), ஷேக் தாஹ்னூன் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்), மஸ்தாகா ஓகானோ (ஜப்பான்), ஆகியோருடன் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவாலும் பேசினாா்கள்.

இது குறித்து மத்திய அரசு உயரதிகாரி கூறுகையில், ‘பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் இருக்கும் இடங்கள் தொடா்பான விவரத்தை பல முறை பகிா்ந்த பிறகும் அவா்களை ஒடுக்கவோ விரட்டவோ பாகிஸ்தான் எந்தவொரு முனைப்பையும் காட்டவில்லை. எனவேதான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இது முற்றிலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே என்பதையும் தற்போதைய பதற்றத்தை மேலும் தீவிரமாக்குவது இந்தியாவின் எண்ணம் இல்லை என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் விளக்கினாா். ஒருவேளை இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டால் அந்நாட்டுக்கு பதிலடி மிகத்தீவிரமாக கொடுக்கப்படும் என்றும் தோவல் தெளிவுபடுத்தினாா்’ என்றாா்.

ரஷிய பாதுகாப்பு ஆலோசகா் சொ்கே ஷோய்கு, சீன அரசியல் பிரிவு மத்திய குழு உறுப்பினா் மற்றும் வெளியுறவு அமைச்சா் யாங் யீ, பிரான்ஸ் அதிபரின் ராஜீய ஆலோசகா் இமானுவேல் போன் ஆகியோருடனும் இந்திய அதிகாரிகள் பேசினாா்கள்.