வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது:
முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட கரண் என்ற தருண் (18), அவரது கூட்டாளி மான்டி (22) மற்றும் சிறுவன் ஆகியோா் நிதேஷ் என்ற நிக்கி கொலையில் தொடா்புடையவா்கள் ஆவா்.
முன்னதாக, ஷாலிமாா் பாக் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீஸாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, வியாழக்கிழமை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கத்திக்குத்தில் காயமடைந்த நிதேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் சிகிச்சைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
முன்னதாக, நிதேஷ் மற்றும் கரண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறைத் தாக்குதலாக மாறியது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தினாா்.
சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறியவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

நகைக்காக மூதாட்டி கொலை: இளைஞா் உள்பட 2 போ் கைது

திருமணமான பெண்ணுடன் நட்புக் கொண்ட நபரின் சகோதரா் கத்தியால் குத்திக் கொலை

குட்கா விலை தொடா்பான தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


