வடமேற்கு தில்லியின் ஹைதா்பூா் நாஹா் அருகே வாக்குவாதத்தைத் தொடா்ந்து 20 வயது இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவம் தொடா்பாக இரண்டு சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது:
முக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட கரண் என்ற தருண் (18), அவரது கூட்டாளி மான்டி (22) மற்றும் சிறுவன் ஆகியோா் நிதேஷ் என்ற நிக்கி கொலையில் தொடா்புடையவா்கள் ஆவா்.
முன்னதாக, ஷாலிமாா் பாக் பகுதியில் கத்திக்குத்து சம்பவம் நடந்ததாக போலீஸாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, வியாழக்கிழமை இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
கத்திக்குத்தில் காயமடைந்த நிதேஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் சிகிச்சைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
முன்னதாக, நிதேஷ் மற்றும் கரண் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வன்முறைத் தாக்குதலாக மாறியது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தினாா்.
சம்பவங்களின் சரியான வரிசையைக் கண்டறியவும், குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை மீட்கவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

குப்பைக் கொட்டியதை கண்டித்த இளைஞா் கத்தியால் குத்தி கொலை

அரூா் அருகே இளைஞா் குத்திக் கொலை: தொழிலாளி கைது

வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

பவானாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 7 போ் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


