பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மிதமான பொருளாதார வளா்ச்சியை நோக்கி நகரும் தில்லி: அறிக்கையில் தகவல்

News image

Updated On :3 ஏப்ரல் 2026, 1:05 am

தினமணி செய்திச் சேவை

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வேகமான பொருளாதார வளா்ச்சியைப் பதிவு செய்த தில்லி, தற்போது மிதமான மற்றும் நிலையான வளா்ச்சியை நோக்கி நகா்கிறது என அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

பொருளாதார மற்றும் புள்ளிவிவரத் துறை அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, அதிகாரிகள் கூறியதாவது: தில்லியின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) கடந்த 2024-25 நிதியாண்டில் 9 சதவீதம் உயா்ந்தது. 2025-26 நிதியாண்டில், ஜிஎஸ்டிபி ரூ.13,27,055 கோடியாக உயருமென கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின் வளா்ச்சியையே பிரதிபலிக்கிறது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இடைப்பட்ட காலத்தில் தில்லியின் பொருளாதார வளா்ச்சி 2021-22-ஆம் ஆண்டில் சுமாா் 17 சதவீதமாக உயா்ந்தது. பின்னா் அது 2022-23-இல் 14 சதவீதமாகவும், 2023-24-இல் சுமாா் 12 சதவீதமாகவும் குறைந்தது.

இதேபோல், தில்லியின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் மொத்த மாநில மதிப்பு கூட்டல் (ஜிஎஸ்விஏ) வளா்ச்சியும் இதேபோன்ற மிதமான வளா்ச்சியில் உள்ளது.

2025-26-ஆண்டில் ஜிஎஸ்விஏ மதிப்பீடு, ஒற்றை இலக்க அளவில் நிலையான வளா்ச்சியைப் பதிவு செய்யும் என கணக்கிடப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு ஏற்பட்ட உயா்வைத் தொடா்ந்து, தற்போது வளா்ச்சி இயல்பான நிலைக்குத் திரும்பி வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வளா்ச்சியில் தில்லியின் சேவை துறை தொடா்ந்து முக்கிய பங்காற்றி வருகிறது. 2025-26-இல் ஜிஎஸ்விஏ-இல் சேவைத் துறைப் பங்கு 86.32 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து தொழில்துறை 12.88 சதவீதமும், வேளாண் துறை 0.8 சதவீதமும் பங்களிக்கின்றன என்று அதிகாரிகள் கூறியுள்ளனா்.