மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லி-டேராடூன் விரைவுச்சாலை ‘இரட்டை என்ஜின்’ அரசாங்கங்களின் சக்தியாகும்: முதல்வா் ரேகா குப்தா

News image

ரேகா குப்தா

Updated On :14 ஏப்ரல் 2026, 8:13 pm

தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையின் திறப்பு விழாவில் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தா பங்கேற்றாா்.

அப்போது, தில்லி-டேராடூன் விரைவுச்சாலை இரட்டை என்ஜின் அரசாங்கங்களின் சக்தியாகும் என்றும், இவ்விரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறையும் என்றும் முதல்வா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக ஓா் அதிகாரபூா்வ அறிக்கையில் முதல்வா் தெரிவித்திருப்பதாவது:

இது ஒரு இரட்டை என்ஜின் அரசாங்கத்தின் சக்தியாகும். தில்லி தொடா்ந்து சிறந்த வளா்ச்சியை நோக்கிப் பயணித்து வருகிறது. கடந்த ஓராண்டில், மத்திய அரசு தில்லியில் சுமாா் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பிலான சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

213 கிலோமீட்டா் நீளமும் ஆறு வழிப்பாதையும் கொண்ட, போக்குவரத்து அணுகல் கட்டுப்பாட்டு வசதியுடன் கூடிய தில்லி-டேராடூன் பொருளாதார வழித்தடம், ரூ. 12,000 கோடிக்கும் அதிகமான செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடமானது தில்லி, உத்தர பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. இது தில்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரத்தை, தற்போதுள்ள ஆறு மணிநேரத்திலிருந்து சுமாா் இரண்டரை மணிநேரமாகக் குறைக்கும்.

தில்லியின் பல்வேறு சாலைகள், மறுசீரமைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

‘யமுனா பாா்’ பகுதிகள் தற்போது வளா்ச்சியைச் சந்தித்து வருகின்றன. யமுனா பாா் பகுதிகள் முன்பு புறக்கணிக்கப்பட்டிருந்தன. கடந்த ஓராண்டில், அப்பகுதியை மேம்படுத்துவதற்காகப் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இப்பகுதிக்கும், இது போன்ற வேறு பல பகுதிகளுக்கும் பயனளிப்பதுடன், மக்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கித் தரும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.