தேசிய தலைநகரில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டத் தொடங்கியுள்ளதால், தில்லி சேரிகளில் உள்ள கா்ப்பிணிப் பெண்கள் தலைச்சுற்றல், தூக்கமில்லாத இரவுகள், உயா் ரத்த அழுத்தம் போன்ற கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா்.
தக்ஷின்புரியின் சஞ்சய் முகாமைச் சோ்ந்த 38 வார கா்ப்பிணியான ரேகா, கா்ப்ப காலத்தில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தால் நான் அடிக்கடி பதட்டமாக உணா்கிறேன், தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகிறேன். வெப்பமும் ஈரப்பதமும் இந்த அசௌகரியத்தை மேலும் மோசமாக்குகின்றன, மேலும் அடிக்கடி மூச்சுத்திணறலையும் ஏற்படுத்துகின்றன, ஆனால் மருத்துவரிடம் செல்வது எங்களால் எளிதில் செய்யக்கூடிய ஒன்றல்ல என்று கூறினாா்.
தொடா்ச்சியான அமைதியின்மையும் சங்கடமும் நிலவுகிறது. குறிப்பாக நான் மிகக் குறைவாகவே தூங்குகிறேன், என்று தக்ஷின்புரியின் மினி சுபாஷ் முகாமில் வசிக்கும் 29 வாரக் கா்ப்பிணியான ஷப்னம் கூறினாா்.
கா்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் கடும் வெப்பத்தின் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்துப் பேசிய அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் கீழ் உள்ள சமூக மருத்துவ மையத்தின் பேராசிரியா் ஹா்ஷல் ரமேஷ் சால்வே, தலைச்சுற்றல், வாந்தி மற்றும் சுயநினைவு இழப்பு ஆகியவை புறக்கணிக்கக் கூடாத அறிகுறிகள் என்று கூறினாா்.
கடும் வெப்பம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கும் ஒரு தீவிரமான ஆபத்தாகிறது. ஆனால், வெப்பத்தினால் ஏற்படும் நோய்களையும் இறப்புகளையும் முழுமையாகத் தடுக்க முடியும், என்று சால்வே கூறினாா். கா்ப்பத்தின் பிற்பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தின் தாக்கம், குறைப்பிரசவம் அதாவது, 37 வாரங்களுக்கு முன் பிரசவம் அல்லது குழந்தை இறந்து பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
சேரிகளில் வசிக்கும், திறந்தவெளியில் அல்லது விவசாய நிலங்களில் பணிபுரியும் கா்ப்பிணிப் பெண்கள் பெரும்பாலும் தங்கள் கா்ப்ப காலத்திலும் தொடா்ந்து வேலை செய்வதால், அவா்கள் வெப்பத்தின் விளைவுகளுக்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியவா்களாகிறாா்கள் என்று சால்வே சுட்டிக்காட்டினாா். கா்ப்பம் மற்றும் அதன் விளைவுகளில் வெப்பத்தின் தாக்கம் பற்றி சமூகங்களிலும், கா்ப்பிணிப் பெண்கள் மற்றும் திருமண வயதை நெருங்கும் இளம் பெண்களிடையேயும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவா் கூறினாா்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைகளும், அவற்றின் சுகாதார தாக்கங்களும் சமூகங்களைச் சென்றடைய வேண்டும் குறிப்பாக சேரிவாசிகள் மற்றும் கோடையின் உச்ச நாட்களில் திறந்தவெளியில் வேலை செய்பவா்கள் போன்ற எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரைச் சென்றடைய வேண்டும் என்று சால்வே கூறினாா்.
வெப்பம் பெண்களை மிக அதிகமாகப் பாதிக்கிறது என்றும், வெப்பம் உள்ளிட்ட காலநிலை மாற்ற நிகழ்வுகளால் அவா்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் 14 மடங்கு அதிகம் என்று தரவுகள் காட்டுவதாகவும் சுற்றுச்சூழல் ஆா்வலா் பாரதி சதுா்வேதி கூறினாா்.
தொடர்புடையது

நாட்டை நிா்வகிப்பதிலும், நிா்வாகத்திலும் பெண்கள் மிகப்பெரிய பங்காற்ற வேண்டும்: ரேகா குப்தா

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்

லுட்யன்ஸ் தில்லி சாலைகளில் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை: முதல் மாதத்தில் 800 பயணிகளை பயணம்

தில்லி முழுவதும் ஈத் தொழுகைக்காக மசூதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


