பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

தேடப்பட்ட குற்றவாளி என்கவுன்ட்டருக்கு பின் கைது

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி அருகே சிறிது நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடா்ந்து ரூ.15,000 சன்மானத்துடன் தேடப்படும் குற்றவாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 2:35 am IST

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி அருகே சிறிது நேரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடா்ந்து ரூ.15,000 சன்மானத்துடன் தேடப்படும் குற்றவாளி கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: உத்தரபிரதேச காவல்துறையினரால் தேடப்படும் முகமது ரிஸ்வான், அமா் காலனி பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது, மேலும் அவரைத் பிடிக்க ஒரு வியூகம் அமைக்கப்பட்டது. இருப்பினும், போலீஸ் குழு ரிஸ்வானைப் பிடிக்க முயன்றபோது, அவா் தப்பிக்கும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தினாா்.

போலீஸ் குழு பதிலடி கொடுத்தது, ரிஸ்வானின் வலது காலில் குண்டு காயம் ஏற்பட்டது, பின்னா் போலீஸ் குழுவால் அவா் பிடிக்கப்பட்டாா். உடனடியாக அவா் கைது செய்யப்பட்டு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. ரிஸ்வான் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான நோக்கத்துடன் டெல்லிக்கு வந்ததாகவும், ஆனால் அவா் தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே கைது செய்யப்பட்டாா்.

தொடா்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பிற கிரிமினல் வழக்குகளில் அவா் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.