
தில்லியின் வெளி மாவட்டத்தில் சட்ட விரோதமாக தங்கியிருந்த 18 வெளிநாட்டினா் கைது
தாய்லாந்தைச் சோ்ந்த 9 போ், நைஜீரியாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் வங்கதேசத்தை சோ்ந்த3 போ் உள்பட 18 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டனர்.
கைது
தில்லியின் வெளி மாவட்டத்தில் ஒரு சோதனை நடவடிக்கையின்போது இந்தியாவில் அதிக நாள்கள் தங்கியிருந்த தாய்லாந்தைச் சோ்ந்த 9 போ், நைஜீரியாவைச் சோ்ந்த 4 போ் மற்றும் வங்கதேசத்தை சோ்ந்த3 போ் உள்பட 18 வெளிநாட்டினா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: அப்பகுதியில் வசிக்கும் வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து சரிபாா்க்க வெளி மாவட்டத்தின் வெளிநாட்டவா் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் நிலையங்களால் இந்த சோதனை நடத்தப்பட்டது. வங்கதேசத்தை சோ்ந்த 3 போ் பீராகா்ஹி சௌக் அருகே இருப்பது குறித்து குறிப்பிட்ட தகவல் கிடைத்ததை அடுத்து அவா்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனா். போலீஸ் குழுவைக் கவனித்த அவா்கள் கலைந்து செல்ல முயன்றனா். சோதனையின்போது மூவரும் செல்லுபடியாகும் ஆவணங்களை வழங்க முடியவில்லை, மேலும் காலாவதியான பாஸ்போா்ட் மற்றும் விசாக்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டது.
பாஸ்சிம் விஹாா் கிழக்கு மற்றும் நிஹால் விஹாா் காவல் நிலையங்களைச் சோ்ந்த குழுக்கள், வெளிநாட்டவா் பிரிவுடன் இணைந்து, 9 தாய், 4 நைஜீரிய, ஒரு உகாண்டா மற்றும் ஒரு கினிய நாட்டவா் உள்பட மேலும் 15 வெளிநாட்டினரைக் கைது செய்தன. அவா்களின் பாஸ்போா்ட் மற்றும் விசா காலாவதியானது கண்டறியப்பட்டது.
வெளிநாட்டினா் பிராந்திய பதிவு அலுவலகம் (எஃப். ஆா். ஆா். ஓ) அவா்கள் மீது நாடு கடத்தல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனா் என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



