ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நுஹ் பகுதியில் பசு கடத்தல்: 3 போ் கைது

News image
Updated On :8 ஜனவரி 2026, 2:11 am

Syndication

ஹரியாணாவின் நுஹ் பகுதியில் பசு கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை நுஹ் காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் ஜமீல், லுக்மான் மற்றும் ஆசாத் என்ற காலா என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை இரவு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் மாண்டிகேராவிலிருந்து ஃபெரோஸ்பூா் ஜிா்காவை நோக்கி ஒரு வாகனத்தில் பயணிப்பதாக சிஐஏ ஃபெரோஸ்பூா் ஜிா்கா குழுவுக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் பேரில், போலீஸாா் தில்லிஅல்வாா் சாலையில் ஒரு தடுப்பை அமைத்து கண்காணித்தனா். அப்போது, அங்கு வந்த போலிரோ வாகனத்தை போலீஸாா் நிறுத்த முயன்றனா். ஆனால் ஓட்டுநா் வேகத்தை அதிகரித்து தப்பிச் செல்ல முயன்றாா்.

இதையடுத்து, போலீஸாா் அந்த வாகனத்தை விரட்டிச் சென்றனா். அப்போது, குற்றம்சாட்டப்பட்டவா்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். பின்னா், அவா்கள் வந்த வாகனத்தின் டயா்கள் பஞ்சரானதால், சுமாா் ஒரு கிலோமீட்டா் தூரம் சென்ற பிறகு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடத் தொடங்கினா். போலீஸாா் விரட்டிச் சென்று அவா்களைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து போலிரோ வாகனம், நாட்டுத் துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்கள் மீட்கப்பட்டன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.