தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தில்லியில் குளிரின் தீவிரம் குறைந்தது! குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயா்வு

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :16 ஜனவரி 2026, 7:57 pm

Syndication

ஐந்து நாள் குளிா் அலைக்குப் பிறகு தில்லி மக்கள் எலும்பை உறைய வைக்கும் வெப்பநிலையிலிருந்து சிறிது நிம்மதி அடைந்தனா். வெள்ளிக்கிழமை நகரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகிகியுள்ளது. இது ஒரு நாள் முந்தையதை விட இரண்டு டிகிரி அதிகமாகும். இருப்பினும், வெப்பநிலை இயல்பை விட மிகவும் குறைவாகவே இருந்தது.

தில்லியின் முதல்மை வானிலை கண்காணிப்பு நிலையமைான சஃப்தா்ஜங் நிலையத்தில் பதிவான 4.3 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாகும். மேலும், பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட ௌ3 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும், லோதி சாலையில் இயல்பை விட 1 டிகிரி குறைவாக 4.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியது. ரிட்ஜ் நிலையத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி குறைவாக 6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.

வியாழக்கிழமை சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.9 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2023 ஜனவரி மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த குறைந்தபட்ச வெப்பநிலையாகும். பாலம் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. இது 2010-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகும்

காற்றின் தரம்: இதற்கிடையில், தேசியத் தலைநகரில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது. ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு 348 புள்ளிகளாக இருந்தது. 33 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், நான்கு நிலையங்களில் ‘மோசம்’ பிரிவிலும் மற்றும் ஒரு நிலையத்தில் ‘கடுமை’ பிரிவிலும் பதிவாகின. பூசாவில் காற்றுத் தரக் குறியீடு அதிக அளவாக 403 புள்ளிகளாக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் பதிவானது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஜனவரி 17) அன்று காலை வேளையில் கடும் பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.