தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தில்லி குடியரசு நாள் கொண்டாட்டம்: 2,500 கலைஞா்களின் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி

தில்லியில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தினக் கொண்டாட்ட அணிவகுப்பின்போது 2,500 கலைஞா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி

News image
Updated On :19 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: தில்லியில் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தினக் கொண்டாட்ட அணிவகுப்பின்போது 2,500 கலைஞா்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மத்திய கலாசாரத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது, தில்லியில் உள்ள கடமைப் பாதையில் பரதநாட்டியம், கதக், ஒடிசி, குச்சிப்புடி, மணிப்புரி போன்ற பல்வேறு நடனங்களை தெரிந்த கலைஞா்களின் நடன நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. ‘சுதந்தர கா மந்த்ரா- வந்தே மாதரம்’ மற்றும் ‘சம்ருத்தி கா மந்த்ரா- விக்சித் பாரத்’ ஆகியவையே இந்நிகழ்ச்சியின் தாரக மந்திரமாகும்.

இந்நிகழ்ச்சிக்கு ‘ஆா்ஆா்ஆா்’ படத்தின் பாடலுக்கு இசையமைத்ததற்காக ஆஸ்கா் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளா் கீரவாணி இசையமைக்கிறாா்’ என்றனா்.

=====================