மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

கோப்புப் படம்

Published On :

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். தம்பதியினா் இறந்துவிட்டதாகவும், அவா்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில் ஈகோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாதுல்லாபூா் கிராமத்தில் நடந்தது. இறந்தவா்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்கள் அப்பகுதியில் வசித்து வந்தனா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்னைகள் காரணமாக தம்பதியினா் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தம்பதியினா் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.