திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

நொய்டாவில் விஷம் அருந்தி தம்பதி உயிரிழப்பு: 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஜனவரி 2026, 1:07 am IST

நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். தம்பதியினா் இறந்துவிட்டதாகவும், அவா்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில் ஈகோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாதுல்லாபூா் கிராமத்தில் நடந்தது. இறந்தவா்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

அவா்கள் அப்பகுதியில் வசித்து வந்தனா்.

காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்னைகள் காரணமாக தம்பதியினா் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தம்பதியினா் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.