நொய்டாவில் இங்கு ‘வீட்டு தகராறு‘ காரணமாக ஐந்து போ் கொண்ட ஒரு குடும்பம் விஷம் குடித்ததாகக் கூறப்படுவதாக வியாழக்கிழமை போலீஸாா் தெரிவித்தனா். தம்பதியினா் இறந்துவிட்டதாகவும், அவா்களது மூன்று குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை இடைப்பட்ட இரவில் ஈகோடெக்-3 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாதுல்லாபூா் கிராமத்தில் நடந்தது. இறந்தவா்கள் பிரயாக்ராஜ் மாவட்டத்தைச் சோ்ந்த ஷ்ரவன் மற்றும் அவரது மனைவி நீலம் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்கள் அப்பகுதியில் வசித்து வந்தனா்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குடும்பப் பிரச்னைகள் காரணமாக தம்பதியினா் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது. அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு தம்பதியினா் இருவரும் இறந்துவிட்டதாக அறிவித்தனா். சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. தம்பதியினரின் 10, 8 மற்றும் 4 வயதுடைய மூன்று குழந்தைகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களின் நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சட்ட நடவடிக்கைகள் நடந்து வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
சலூன் கடைக்காரா் விஷம் குடித்து தற்கொலை

தெரு நாயைக் கொன்ற சம்பவத்தில் பாதுகாவலாளி மீது வழக்கு

கிரேட்டா் நொய்டாவில் இருவா் சடலமாக மீட்பு

துவாரகா: கோல்ஃப் மைதான குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



