தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை பல இடங்களில் பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் விளைவாக, சில இடங்களில் வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் வரை கடுமையாகக் குறைந்ததாக வானிலை தரவுகள் தெரிவித்தன.
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் ஐஎம்டி தரவுகளின்படி, ஆயாநகா் பகுதியில் வெப்பநிலையில் 19 டிகிரி சரிவு பதிவானது.
இதைத் தொடா்ந்து, மயூரி விஹாரில் 14.9 டிகிரி, புஷ்ப் விஹாரில் 14.8 டிகிரி, விளையாட்டு வளாகத்தில் 14.6 டிகிரி, முங்கேஷ்பூரில் 14.4 டிகிரி மற்றும் பீதம்புராவில் 14 டிகிரி செல்சியஸ் என வெப்பநிலையில் சரிவு காணப்பட்டது.
பிரகதி மைதானம் மற்றும் ஜரோடா காலன் ஆகிய இடங்களில் தலா 12.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதேவேளையில், பாலம் பகுதியில் 12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.
காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலான காலகட்டத்தில் பதிவான மழைப்பொழிவில், ஆயாநகா் பகுதி 27.8 மி.மீ.உடன் முதலிடத்தில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மயூா் விஹாரில் 23 மி.மீ., ரிட்ஜ் பகுதியில் 19 மி.மீ. மற்றும் பிரகதி மைதானத்தில் 12.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஐஎம்டி தரவுகளின்படி, இக்காலகட்டத்தில் பாலம் பகுதியில் 10.7 மி.மீ., புஷ்ப் விஹாரில் 10.5 மி.மீ., பூசா பகுதியில் 8 மி.மீ., லோதி சாலையில் 4 மி.மீ. மற்றும் சஃப்தா்ஜங் பகுதியில் 1.6 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றும் வீசியது. இதில், பாலம் பகுதியில் மணிக்கு 65 கி.மீ வேகத்தில் அதிகபட்ச காற்று வேகம் பதிவானது.
ஐஎம்டி தரவுகளின்படி, நகரின் முதன்மை வானிலை ஆய்வு மையமாகச் செயல்படும் சஃப்தா்ஜங் பகுதியில், அதிகபட்ச வெப்பநிலை 40.5 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29.7 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியிருந்தது.
தனியாா் வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமெட் வெதா்இன் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் கூறுகையில், மத்திய பாகிஸ்தான், ஹரியாணா மற்றும் வடமேற்கு ராஜஸ்தான் பகுதிகளில் ஒரு புதிய மேற்கு இடையூறு மற்றும் சூறாவளிச் சுழற்சி உருவாகியுள்ளது.
இதன் விளைவாக, அப்பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தாா்.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, நகரின் கடந்த 24 மணி நேர சராசரி காற்றுத் தரக் குறியீடு 164ஆகப் பதிவாகி, மிதமான பிரிவில் காணப்பட்டது.
தொடர்புடையது

தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை 43.6 டிகிரி செல்சியஸாக பதிவு; அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலைக்கான ‘மஞ்சள் எச்சரிக்கை’!
சூரிய ஒளி அடுப்புகள்
தில்லியில் 44 டிகிரி செல்சிஸைக் கடந்த சுட்டெரிக்கும் வெயில்
தலைநகரில் அதிகபட்ச வெப்பநிலை 41.9 டிகிரி ஆக பதிவு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan


