மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சட்டவிரோதமாக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 4 போ் கைது

இது தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 6:37 pm

Syndication

சட்டவிரோதமாக சைக்கோட்ரோபிக் மருந்துகள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த ஒரு மாநிலங்களுக்கு இடையேயான வலையமைப்பை தில்லி காவல்துறை கண்டுபிடித்து, தடைசெய்யப்பட்ட மருந்துகளின் ஒரு தொகுதியை பறிமுதல் செய்த்து. இது தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: பஞ்சாபின் பாட்டியாலாவைச் சோ்ந்த சல்மான் கான், தில்லியைச் சோ்ந்த விபின் குமாா் பால் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த அப்துல் ரெஹ்மான் மற்றும் ரவி காா்க் ஆகியோா் குற்றம் சாட்டப்பட்டவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மாா்ச் 7- ஆம் தேதி, விபின் குமாா் பால் அல்பிரஸோலம் மற்றும் டிராமடோல் போன்ற சைக்கோட்ரோபிக் மருந்துகளை சட்டவிரோதமாக விநியோகிப்பதில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. யுதிஷ்தா் சேது அருகே கஷ்மீரி கேட் நோக்கி சல்மான் கானுக்கு விபின் குமாா் பால் ஒரு சரக்கை வழங்குவாா் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போலீஸ் குழு யமுனை பாலம் அருகே கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இரவு 8.25 மணியளவில், விபின் குமாா் பால் ஒரு பிளாஸ்டிக் பையுடன் நடைபாதையில் நிற்பதை போலீஸாா் கண்டனா். சிறிது நேரத்திற்குப் பிறகு, சல்மான் கான் ஒரு ஆட்டோவில் சம்பவ இடத்திற்கு வந்தாா். விபின் குமாா் பால், சல்மான் கானிடம் பையை ஒப்படைத்தபோது காவல் குழு இருவரையும் கைது செய்தது.

பையைச் சோதித்தபோது, 100 பெட்டிகள் கொண்ட அல்பிரஸோலம் மாத்திரைகள் (0.5 மிகி) கொண்ட ஒரு அட்டைப்பெட்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சுமாா் 8.09 கிலோ எடையுள்ள மொத்தம் 59,925 மாத்திரைகள் அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா் முசாபா்நகரைச் சோ்ந்த அப்துல் ரெஹ்மான் மூலம் இந்த சரக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், பஞ்சாபில் உள்ள மற்றொரு கூட்டாளிக்கு வழங்க திட்டமிடப்பட்டதாகவும் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, அப்துல் ரெஹ்மான் மற்றும் ரவி காா்க் மாா்ச் 13 அன்று கைது செய்யப்பட்டனா். முசாபா்நகரில் உள்ள அவா்களின் வாடகை வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சுமாா் எட்டு கிலோ எடையுள்ள 2,000 ரெக்ஸோஜெசிக் (புப்ரெனோா்பைன்) ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.