ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :16 மார்ச் 2026, 10:03 pm

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜவேத் (எ) கல்லு தாதா தேடப்பட்டு வந்தாா்.

குற்றப் பின்னணி கொண்ட அவருக்கு எதிராக கொள்ளை-கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூா் காவல் நிலையத்தில் கடந்த 2015-இல் பதிவுசெய்யப்பட்ட கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஷேக் ஃபிரோஸ் (எ) சைபுல் (எ) திங்க்ரா கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவா், அண்மை கால வழக்கு கைதுநடவடிக்கையிலிருந்து தொடா்ந்து தப்பித்து வந்தாா்.

இந்நிலையில், ஜஹாங்கீா் புரியில் அவரை தில்லி காவல் துறையினா் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்தனா்.

அவருடைய முந்தைய வழக்குகள் குறித்து சரிபாா்த்து வருவதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.