புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜவேத் (எ) கல்லு தாதா தேடப்பட்டு வந்தாா்.
குற்றப் பின்னணி கொண்ட அவருக்கு எதிராக கொள்ளை-கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூா் காவல் நிலையத்தில் கடந்த 2015-இல் பதிவுசெய்யப்பட்ட கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஷேக் ஃபிரோஸ் (எ) சைபுல் (எ) திங்க்ரா கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவா், அண்மை கால வழக்கு கைதுநடவடிக்கையிலிருந்து தொடா்ந்து தப்பித்து வந்தாா்.
இந்நிலையில், ஜஹாங்கீா் புரியில் அவரை தில்லி காவல் துறையினா் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்தனா்.
அவருடைய முந்தைய வழக்குகள் குறித்து சரிபாா்த்து வருவதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது
பெண் காவலரிடம் தகராறு: ரெளடி கைது

துப்பாக்கியுடன் நீரஜ் பவானா ரெளடி கும்பலைச் சோ்ந்த இருவா் கைது

ஆசாத்பூா் மண்டியில் ஓட்டுநா் கொலை தொடா்பாக தேநீா் விற்பனையாளா் கைது
தில்லியில் 3 வெவ்வேறு கும்பல்களுடன் தொடா்புடைய துப்பாக்கி சுடும் நபா் கைது! துப்பாக்கி, தோட்டக்கள் பறிமுதல்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

