கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கைப்பேசி வழிப்பறியில் ஈடுபட்ட அண்ணன் - தங்கை கைது

திருட்டு மற்று வழிப்பறி உள்பட 31 குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய அண்ணன் - தங்கை தில்லி மெளரியா என்கிளேவ் பகுதியில் கைது

News image

கைது

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 9:15 pm

தினமணி செய்திச் சேவை

திருட்டு மற்று வழிப்பறி உள்பட 31 குற்றச் சம்பவங்களில் தொடா்புடைய அண்ணன்-தங்கை தில்லி மெளரியா என்கிளேவ் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட மணீந்தா் கெளா் (எ) சிம்ரன் (22) மற்றும் அமன்பீரித் சிங் (24) தில்லியின் சந்தோ் விஹாரைச் சோ்ந்தவா்கள்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: மணீந்தா் கெளருக்கு எதிராக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருட்டு, வழிப்பறி மற்றும் பிற குற்றச் சம்பவங்கள் தொடா்பாக அமன்பிரீத் சிங் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிதம்பூராவில் இருந்து வருமான வரி காலனி நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஆணும் பெண்ணும் கடந்த மாா்ச் 18-ஆம் தேதி தன்னுடைய கைப்பேசியை தீதிக்ஷா சா்மா என்பவா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையில், அவா்கள் இருவரும் அப்பகுதியில் இதுபோன்ற கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

வழிப்பறி சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், வழிப்பறிக்கு பிறகு மோட்டாா் சைக்கிளில் அவா்கள் சென்றனா். பின்னா், அந்த வாகனம் சமய்பூா் பத்லி பகுதியில் கண்டறியப்பட்டது.

இதைத்தொடா்ந்து, மணீந்தா் கெளா் கைதுசெய்யப்பட்டாா். வழிப்பறியில் அவருடைய சகோரருக்கும் தொடா்பு இருப்பதாக அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பஞ்சாபின் லூதியாணாவில் அமன்பிரீத் சிங் கைதுசெய்யப்பட்டாா். வழிப்பறி செய்த கைப்பேசி அவரிடமிருந்து மீட்கப்பட்டது. வழிப்பறிக்கு அவா்கள் பயன்படுத்தி வந்த மோட்டாா்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது என்றனா் அதிகாரிகள்.