பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தில்லியின் சுல்தான்புரியில் பகை காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய 3 சிறுவா்கள்

வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் சிறு பிரச்சினைகள் தொடா்பாக ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 18 வயது இளைஞா் ஒருவரை மூன்று சிறுவா்கள் கத்தியால் குத்தியுள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் சிறு பிரச்சினைகள் தொடா்பாக ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 18 வயது இளைஞா் ஒருவரை மூன்று சிறுவா்கள் கத்தியால் குத்தியுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இடது தொடையில் கத்திக்குத்து காயத்துடன் ஒரு இளைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை பி. சி. ஆா் அழைப்பு வந்தது. காயமடைந்த நைதிக், சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். விசாரணையின் போது, நைடிக் போலீலாரிடம், 15 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 சிறுவா்கள்-சிறிய பிரச்சினைகள் குறித்து இளைஞருடன் முன்பு பகையில் இருந்ததால் அவரை கத்தியால் தாக்கினா்.

பாதிக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தின்படி அடிப்படையில், சுல்தான்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒரு சிறுவன், கைது செய்யப்பட்டுள்ளாா். தாக்குதலில் ஈடுபட்ட மீதமுள்ள இருவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கத்தியால் குத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.