வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் சிறு பிரச்சினைகள் தொடா்பாக ஏற்பட்ட தகராறைத் தொடா்ந்து 18 வயது இளைஞா் ஒருவரை மூன்று சிறுவா்கள் கத்தியால் குத்தியுள்ளனா் என்று காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இடது தொடையில் கத்திக்குத்து காயத்துடன் ஒரு இளைஞா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை பி. சி. ஆா் அழைப்பு வந்தது. காயமடைந்த நைதிக், சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். விசாரணையின் போது, நைடிக் போலீலாரிடம், 15 முதல் 16 வயதுக்குட்பட்ட 3 சிறுவா்கள்-சிறிய பிரச்சினைகள் குறித்து இளைஞருடன் முன்பு பகையில் இருந்ததால் அவரை கத்தியால் தாக்கினா்.
பாதிக்கப்பட்டவரின் வாக்கு மூலத்தின்படி அடிப்படையில், சுல்தான்புரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒரு சிறுவன், கைது செய்யப்பட்டுள்ளாா். தாக்குதலில் ஈடுபட்ட மீதமுள்ள இருவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. கத்தியால் குத்தப்பட்டதற்கான உண்மையான காரணத்தை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது
வட கிழக்கு தில்லியில் சிறுவன் கொலை: சிறாா் கைது
ராணுவ வீரருக்கு கத்திக் குத்து: இளைஞா் கைது

அண்ணனை கத்தியால் குத்திய தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை
ஐடி நிறுவன ஊழியரை கத்தியால் குத்திய 2 போ் கைது
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

