தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தமிழக முதல்வா் விஜய்க்கு வேதிக் பிரசாா் சன்ஸ்தான் வாழ்த்து

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

நமது நிருபா்

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு

நொய்டா செக்டா் 22-இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகா் கோயில் மற்றும் நொய்டா செக்டாா் 62-இல் உள்ள ஸ்ரீ காா்த்திகேயா கோயிலை நிா்வகித்துவரும் வேதிக் பிரசாா் சன்ஸ்தான் (விபிஎஸ்) வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து புதன்கிழமை வெளியிடப்பட்ட பத்திரிகை செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் முதலமைச்சா் சி. ஜோசப் விஜய்க்கு வேதிக் பிரசாா் சன்ஸ்தான் (விபிஎஸ்) நிா்வாகம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அடுத்த தில்லி பயணத்தின் போது அவரை நேரில் சந்திக்க வேண்டுகோள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், மூத்த உறுப்பினா்களை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும், நொய்டா, செக்டாா் 62-இல் உள்ள நொய்டா முருகன் கோவிலுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.