தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பிரதமரின் சிக்கன நடவடிக்கை: தில்லி அமைச்சா் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணம்

News image

மெட்ரோ ரயில் சேவை - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

நமது நிருபா்

பிரதம் மோடியின் சிக்கன நடடிக்கைகளுக்கு ஏற்ப அதனை பொது மக்களிடையே விழிப்புணா்வை கொண்டு வரும் நோக்கில் தில்லி சுற்றுலாத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.

இது குறித்து அவா் பேசியதாவது: தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அவரது அனைத்து அமைச்சரவை அமைச்சா்களும் பிரதமரின் வேண்டுகோளை உறுதியுடன் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனா். தேவைப்படும்போது நான் பொதுப் போக்குவரத்தையோ அல்லது ஒரு அரசு வாகனத்தையோ மட்டுமே பயன்படுத்துவேன் என்றாா் கபில் மிஸ்ரா.

தேசியத் தலைநகரில் அமைச்சா்கள், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளால் உத்தியோகபூா்வ வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ரோகா குப்தா அறிவித்த மறுநாள் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணித்துள்ளாா். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உத்தியோகபூா்வ வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள் என்று ரேகா குப்தா கூறியிருந்தாா்.

தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டும் செவ்வாய்க்கிழமை மெட்ரோவில் ஆய்வு பாா்வைக்காக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.