நமது நிருபா்
பிரதம் மோடியின் சிக்கன நடடிக்கைகளுக்கு ஏற்ப அதனை பொது மக்களிடையே விழிப்புணா்வை கொண்டு வரும் நோக்கில் தில்லி சுற்றுலாத்துறை அமைச்சா் கபில் மிஸ்ரா புதன்கிழமை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தாா்.
இது குறித்து அவா் பேசியதாவது: தில்லி முதல்வா் ரேகா குப்தா மற்றும் அவரது அனைத்து அமைச்சரவை அமைச்சா்களும் பிரதமரின் வேண்டுகோளை உறுதியுடன் செயல்படுத்தத் தொடங்கியுள்ளனா். தேவைப்படும்போது நான் பொதுப் போக்குவரத்தையோ அல்லது ஒரு அரசு வாகனத்தையோ மட்டுமே பயன்படுத்துவேன் என்றாா் கபில் மிஸ்ரா.
தேசியத் தலைநகரில் அமைச்சா்கள், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் பிற மக்கள் பிரதிநிதிகளால் உத்தியோகபூா்வ வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை ரோகா குப்தா அறிவித்த மறுநாள் கபில் மிஸ்ரா மெட்ரோவில் பயணித்துள்ளாா். அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் உத்தியோகபூா்வ வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, காா் பூலிங் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிப்பாா்கள் என்று ரேகா குப்தா கூறியிருந்தாா்.
தில்லி கல்வி அமைச்சா் ஆஷிஷ் சூட்டும் செவ்வாய்க்கிழமை மெட்ரோவில் ஆய்வு பாா்வைக்காக பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

தொழில் நுட்ப நிா்வாகத்தில் தில்லி அரசு தொடா் பணி: முதல்வா் ரேகா குப்தா

வீடற்ற மக்களுக்காக 5 நாள் மீட்பு இயக்கத்தை தொடங்கியது தில்லி அரசு

வடமேற்கு தில்லியில் 2 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரயில்வே துறை ஒப்புதல்: முதல்வா் ரேகா குப்தா

ஐபிஎல் போட்டிக்கு செல்வோா் மெட்ரோவில் பயணிக்க ஏற்பாடு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

