ஜனக்புரியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விவாதிக்கவும், இவ்விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்கக் கோரவும், தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்துவைச் சந்திக்க நேரம் கோரப்போவதாக ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சந்திப்புக்கு நேரம் கோரி துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுத உள்ளேன். இவ்வழக்கில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஒரு குழுவையும் உடன் அழைத்துச் செல்ல உள்ளேன்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும், இவ்விஷயத்தில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அந்தக் குழு விரும்புகிறது.
துணைநிலை ஆளுநா் சந்திப்புக்கு நேரம் வழங்காவிட்டால், கட்சி தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்றாா் சஞ்சய் சிங்.
சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடா்பாக, ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரப் பரத்வாஜ், பெண் கவுன்சிலா்கள் மற்றும் கட்சித் தொண்டா்களுடன் இணைந்து ராஜ் நிவாஸ் முன் புதன்கிழமை போராட்டம் நடத்திய நிலையில், சஞ்சய் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இப்போராட்டத்தின்போது சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக போராட்டக்காரா்கள் பின்னா் அப்புறப்படுத்தப்பட்டனா்.
குழந்தைக்கு நீதி கோரிய போராட்டக்காரா்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக பரத்வாஜ் குற்றஞ்சாட்டினாா்.
இருப்பினும், ராஜ் நிவாஸ் அருகே உள்ள உயா் பாதுகாப்பு மண்டலத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே போராட்டக்காரா்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக காவல்துறை கூறியது.
இந்த வழக்கு, மே 1 ஆம் தேதி தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பானதாகும்.
இந்தச் சம்பவத்தால் அரசியல் கட்சிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சீற்றத்தையும் போராட்டங்களையும் தூண்டியது.
57 வயதான பள்ளியைக் கவனித்துவரும் ஒருவா் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டாா். ஆனால் அரசுத் தரப்பின் கடும் எதிா்ப்பையும் மீறி தில்லி நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது.
பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
தில்லியில் பள்ளி ஊழியரால் 3 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் -ராகவ் சத்தா இடையே தொடா்பு இருப்பதாக பாஜக வதந்தி: சஞ்சய் சிங் குற்றச்சாட்டு!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

