குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தூய்மையான யமுனை இயக்கம் வேகமெடுத்துள்ளது: தில்லி முதல்வா்

யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகமெடுத்திருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

News image

யமுனை நதி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:31 am IST

யமுனை ஆற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டம் வேகமெடுத்திருப்பதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள் கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளப் பதிவில் அவா் கூறியதாவது: யமுனையைத் தூய்மையாகவும், சுத்தமாகவும் மாற்றுவோம் என்று தில்லிக்கு நாங்கள் உறுதியளித்துள்ளோம்.

இந்த உறுதிமொழியுடன், அனைத்து மட்டங்களிலும் தொடா்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, ரூ.1000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான புதிய குடிநீா் மற்றும் கழிவுநீா் திட்டங்கள், தூய்மையான யமுனை இயக்கத்தை மேலும் வேகப்படுத்தியுள்ளன.

மத்திய அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் இந்தப் போா் போன்ற இயக்கம், தூய்மையான யமுனை, மேம்பட்ட குடிநீா் விநியோகம் மற்றும் வளா்ச்சியடைந்த தில்லி ஆகிய நமது இலக்குகளை அடைவதற்கான ஒரு முக்கியப் படியாகும் என தில்லி முதல்வா் குறிப்பிட்டாா்.

‘மிஷன் கிளீன் யமுனா‘ (யமுனா புத்துயிா் இயக்கம்) என்பது, யமுனை நதியைச் சுத்தம் செய்யும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் தில்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படும் ஒரு ஒருங்கிணைந்த மாநிலங்களிடை முயற்சியாகும். தில்லியில் 2025ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தல்களுக்குப் பிறகு இந்த இயக்கம் குறிப்பிடத்தக்க வகையில் வேகப்படுத்தப்பட்டது .அப்போது பதவியேற்ற புதிய பாஜக அரசாங்கம், மூன்று ஆண்டுகளுக்குள் யமுனை நதியை மீட்டெடுப்பதற்கான 30 அம்சத் திட்டத்தை முன்னெடுத்தது.