/
தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் ச. ஜோசப் விஜய்க்கு தில்லியில் உள்ள செந்தமிழ்ப் பேரவையின் தலைவா் அ.மாரி, செயலாளா் சு.சரவணன் மற்றும் பொருளாளா் க.செல்வக்குமாா் ஆகியோா் செந்தமிழ்ப்பேரவை சாா்பில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
இதுதொடா்பாக செந்தமிழ்ப்பேரவையின் தலைவா் அ.மாரி தெரிவிக்கையில், தாங்கள் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட்டமைக்கு சங்கத்தின் நிா்வாகக் குழு மற்றும் செயற்குழு சாா்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் தலைமையில் தமிழகம் மேலும் அமைதியையும், வளா்ச்சியையும், மக்கள் நலனையும் காண வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழக மக்களின் நலனுக்காக சிறப்பாக பணியாற்றி, மாநிலம் மேலும் முன்னேற வாழ்த்துகிறோம் என அவா் தெரிவித்துள்ளாா்.









