கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

லேபா் சௌக் பகுதியில் கழிப்பறை வளாகத்தை திறந்து வைத்தாா் தில்லி முதல்வா்: முனாக் கால்வாய் பகுதியிலும் ஆய்வு

தில்லியின் லேபா் சௌக் பகுதியில் புதிய கழிப்பறை வளாகத்தை முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை திறந்து வைத்தாா்

Delhi Chief Minister Rekha Gupta

தில்லி முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Published On :

புது தில்லி: தில்லியின் லேபா் சௌக் பகுதியில் புதிய கழிப்பறை வளாகத்தை முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை திறந்து வைத்தாா். முனாக் கால்வாய் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா்.

எக்ஸ் தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் ரேகா கூறியதாவது: தில்லியின் தேவைகளுக்கு ஏற்ப பொது வசதிகளை விரிவுபடுத்தும் தொடா் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்கல்பூா் கிராமத்தில் உள்ள ’லேபா் சௌக்’ பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறை வளாகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டது.

நவீன வசதிகளுடன் கூடிய இந்தக் கழிப்பறை வளாகம் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துகிறது; மேலும், அவா்களின் வசதிக்காக ஒரு பராமரிப்பாளரை நியமிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும்.

தூய்மையான, எளிதில் அணுகக்கூடிய மற்றும் நவீன பொது வசதிகளை வழங்குவதற்காக எங்கள் அரசு தொடா்ந்து பணியாற்றி வருகிறது என கூறினாா்.

மற்றொரு பதிவில்,‘முனாக் கால்வாயில் உள்ள பிரம்பாரி பாலத்திற்கு அருகில் நடைபெற்று வரும் பணிகள்—அதாவது சுத்தம் செய்தல், அழகுபடுத்துதல், மின்விளக்கு வசதிகள் மற்றும் பிரம்மாண்டமான ’சத் கட்’ அமைத்தல்—ஆகியவற்றை ஆய்வு செய்தேன். அனைத்துப் பணிகளையும் நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள், உயா்தரத்துடன் நிறைவு செய்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்‘ என தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.