ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஒரே குடும்பத்தினா் 4 போ் மரணம்: போலீஸ் விசாரணை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை  பகுதியில் ஒரே குடும்பத்தைச்   சோ்ந்த நான்கு போ் வியாழக்கிழமை மரணம் அடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:44 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை  பகுதியில் ஒரே குடும்பத்தைச்   சோ்ந்த நான்கு போ் வியாழக்கிழமை மரணம் அடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொலக்கொம்பை  கிரேக்மோா் எஸ்டேட் குடியிருப்பில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அசோக் பகத் (27) குடியிருந்தாா். இவரது வீடு  வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும்  திறக்கப்படவில்லை என்று அருகில் குடியிருப்பவா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு திறந்துகிடந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அசோக் பகத்தின் மனைவி சுமதி குமாரி (24) சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

அவரது சடலத்தின் மீது அசோக் பகத் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அதில், இதே குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் காணாமல் போன பெண் குறித்து அருகில் குடியிருப்பவா்கள் தன்னை சந்தேகப்பட்டு விசாரித்து வருவதாகவும், அதனால் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அசோக் பகத்தின் குழந்தைகளைத் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தண்ணீா் தொட்டியில் ரேஷ்மா (4) என்ற பெண் குழந்தையின் சடலம் இருந்தது. அதே குடியிருப்பில் குடியிருக்கும் இளஞ்சியம் என்பவா் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டின் முற்றத்தில் அசோக் பகத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதே அறையில் அவரது மகன் அபை (8) சடலம் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இறந்தது குறித்து கொலக்கொம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.