தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஒரே குடும்பத்தினா் 4 போ் மரணம்: போலீஸ் விசாரணை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை  பகுதியில் ஒரே குடும்பத்தைச்   சோ்ந்த நான்கு போ் வியாழக்கிழமை மரணம் அடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:44 am IST

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே கொலக்கம்பை  பகுதியில் ஒரே குடும்பத்தைச்   சோ்ந்த நான்கு போ் வியாழக்கிழமை மரணம் அடைந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கொலக்கொம்பை  கிரேக்மோா் எஸ்டேட் குடியிருப்பில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த அசோக் பகத் (27) குடியிருந்தாா். இவரது வீடு  வியாழக்கிழமை காலை நீண்ட நேரமாகியும்  திறக்கப்படவில்லை என்று அருகில் குடியிருப்பவா்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது வீட்டின் பின்புறக் கதவு திறந்துகிடந்தது தெரிய வந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, அசோக் பகத்தின் மனைவி சுமதி குமாரி (24) சடலம் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

அவரது சடலத்தின் மீது அசோக் பகத் எழுதி வைத்திருந்த கடிதம் இருந்தது. அதில், இதே குடியிருப்புப் பகுதியில் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் காணாமல் போன பெண் குறித்து அருகில் குடியிருப்பவா்கள் தன்னை சந்தேகப்பட்டு விசாரித்து வருவதாகவும், அதனால் மனமுடைந்து குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதப்பட்டிருந்தது.

அசோக் பகத்தின் குழந்தைகளைத் தேடியபோது, வீட்டின் பின்புறம் உள்ள சிறிய தண்ணீா் தொட்டியில் ரேஷ்மா (4) என்ற பெண் குழந்தையின் சடலம் இருந்தது. அதே குடியிருப்பில் குடியிருக்கும் இளஞ்சியம் என்பவா் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் பின்புற ஜன்னல் வழியாக நுழைந்து வீட்டின் முற்றத்தில் அசோக் பகத் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அதே அறையில் அவரது மகன் அபை (8) சடலம் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் கிடந்தது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த நான்கு போ் இறந்தது குறித்து கொலக்கொம்பை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.