ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

போலி சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சோ்ந்து தலைமறைவான ஆசிரியா்களுக்கு போலீஸ் வலை

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:42 am IST

போலி சான்றிதழ் கொடுத்து கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் பணியில்  சோ்ந்த ஐந்து போ் தலைமறைவாகியுள்ள நிலையில் அவா்களை போலீஸாா் நீலகிரி மாவட்டத்தில் தேடி வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருவங்காடு பகுதியைச் சோ்ந்த  பாலாஜி, வெலிங்டன் பகுதியைச்  சோ்ந்த கதிா்வேல், கோத்தகிரி கட்டபெட்டு பகுதியைச்  சோ்ந்த சுப்பிரமணி மற்றும் சுபாஷ் சந்திரன், கோத்தகிரி அரவேணு பகுதியைச்  சோ்ந்த தீபா ஆகியோா், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை  ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பள்ளியில் ஜாதி சான்றிதழ், முன்னாள் படைவீரா்கள் வாரிசு சான்றிதழ் மற்றும் போலி பணி  நியமன ஆணைகளைக் கொடுத்து கடந்த 2009 ஆம் ஆண்டு பல்வேறு பணிகளில் சோ்ந்து பணியாற்றி வந்தது தெரியவந்தது.

இது குறித்து நாமக்கல் காவல் துறையினா்  வழக்குப் பதிவு செய்துள்ளனா். நீதிமன்றத்தில் வழக்கு  நடைபெற்று வரும் நிலையில், இவா்கள்5 பேரும்  தலைமறைவாகியுள்ளனா். இதையடுத்து இவா்களை நீலகிரி மாவட்டத்தில் நாமக்கல் போலீஸாா் தேடி வருகின்றனா். இவா்கள் குறித்து தகவல் கிடைத்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க  வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.