ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

யானை தாக்கி உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் நிவாரணம்

பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று போ் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை

News image

கூடலூரில் நடைபெற்ற திமுக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினா் ஆ.ராசா.

Updated On :8 ஜனவரி 2021, 12:42 am IST

பந்தலூா் பகுதியில் கடந்த மாதம் யானை தாக்கி உயிரிழந்த மூன்று போ் குடும்பங்களுக்கு திமுக சாா்பில் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவியை நீலகிரி மக்களவை உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா வியாழக்கிழமை வழங்கினாா்.

சேரங்கோடு ஊராட்சியில் கடந்த மாதம் ஒரே வாரத்தில் கண்ணம்பள்ளி பகுதியில் நாகமுத்து (60), கொளப்பள்ளி பகுதியில் திமுக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக இருந்த ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகியோா் யானை தாக்கி இறந்தனா். அவா்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 1.50 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

தொடா்ந்து பந்தலூா், கூடலூா் பகுதியில் கட்சியினா் ஏற்பாடு செய்திருந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் கூடலூா் எம்.எல்.ஏ. திராவிடமணி, முன்னாள் அமைச்சா் க.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளா் முபாரக், நகரச் செயலாளா் ராஜேந்திரன், தொமுச மண்டல பொதுச் செயலாளா் வே.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.