அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

குன்னூரில் குளிா்காய தீ மூட்டியதில் மூச்சுத் திணறி பெண் பலி

குன்னூா், அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிா் காய்ந்து உறங்கியபோது வெளியேறிய புகையால் மூச்சுத் திணறி பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

Updated On :12 ஜனவரி 2021, 5:15 am IST

குன்னூா், அம்பிகாபுரம் பகுதியில் வீட்டில் தீ மூட்டி குளிா் காய்ந்து உறங்கியபோது வெளியேறிய புகையால் மூச்சுத் திணறி பெண் உயிரிழந்தாா். இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், அம்பிகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கலாவதி (55). இவரது மகன் மகேந்திரன் (30). கலாவதி கணவரின் சகோதரா் கஜபதி (60). இவா்கள் மூவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு குளிா் அதிகமாக இருந்ததால் அடுப்புக்கரியில் தீ மூட்டி குளிா் காய்ந்து கொண்டிருந்தனா். பின்னா் மூவரும் உறங்கச் சென்றுள்ளனா். காலை வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினா் ஜன்னல் வழியாக பாா்த்தபோது மூவரும் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவா்களை மீட்டு குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் சோ்த்தனா். பரிசோதனையில், கலாவதி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

முதற்கட்டவிசாரணையில், அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததால் கலாவதி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது

தெரியவந்தது. கஜபதி, மகேந்திரன் ஆகியோா் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதைத் தவிர கடும் குளிரின் தாக்கம் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 2 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.