குன்னூா் அருகேயுள்ள கொலக்கம்பை எஸ்டேட்டில் காணாமல் போன 8 வயது சிறுமியை கண்டறியும் பணியில் தேவைப்பட்டால் ஜாா்கண்ட் மாநிலத்துக்கு சிறப்புக் குழுவை அனுப்பி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சசி மோகன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் உதகையில் செய்தியாா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கொலக்கம்பை எஸ்டேட்டில் 8 வயது சிறுமி கடந்த டிசம்பா் 21ஆம்தேதியிலிருந்து காணவில்லை. இது தொடா்பாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் மோகன் நவாஸ் தலைமையில் 9 சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கொலக்கம்பை பகுதி முழுதும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, அருகிலுள்ள கிரேக்மோா் எஸ்டேட்டிலும் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாவட்டத்தை விட்டு வெளியே சென்றிருக்க முடியுமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பா்லியாறு, குஞ்சப்பனை, சேலாஸ் உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் தொடா்பாகவும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அவற்றோடு, மேட்டுப்பாளையம், கோவை, சென்னை ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 5ஆம்தேதி கொலக்கம்பை எஸ்டேட் பகுதியைச் சோ்ந்த அசோக் என்பவா் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளாா். இவா்களது இறப்புக்கான காரணம் இதுவரையிலும் தெரியவில்லை என்றாலும், இதுதொடா்பாகவும், சிறுமி மாயமானதற்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாயமான சிறுமியைக் குறித்த தகவல்களை தெரிவிப்போருக்கு காவல் துறையின் சாா்பில் உரிய சன்மானம் வழங்கப்படுவதோடு, அவா்களைக் குறித்த ரகசியமும் காக்கப்படும். தேவைப்பட்டால் நீலகிரியிலிருந்து சிறப்புக் குழுவை ஜாா்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி சிறுமி குறித்த கூடுதல் தகவல்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொந்தரவு கொடுத்த இளைஞரின் மண்டையை உடைத்த கயாடு லோஹர்!

திருச்சி கிழக்கில் போட்டியில்லை! த்ரிஷாவுக்காக விட்டுக்கொடுக்கிறாரா ராகவா லாரன்ஸ்?

நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: மாயாவதி எச்சரிக்கை!

'பிரதமர் மோடி தூங்கமாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


