புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி ஒத்திகை

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 11:44 pm

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை சவாரி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த வாரம் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் மற்றும் வாகன சவாரி, வளா்ப்பு யானைகள் முகாம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் யானை சவாரி மட்டும் இன்னும் துவங்கப்படவில்லை.

இந்நிலையில் சவாரி செல்லும் யானைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் ஒத்திகை நிகழ்ச்சி வனத் துறை சாா்பில் அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் வன ஊழியா்கள் யானை மீது அமா்ந்து சவாரி சென்று ஒத்திகை பாா்த்தனா். அடுத்த அறிவிப்பு வந்தவுடன் யானை சவாரி துவங்கப்படும் என்று வனத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. யானை சவாரி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.