கோத்தகிரி, மாா்வளா கைகாட்டிப் பகுதியில் பொதுமக்கள் எதிா்ப்பால் மூடப்பட்ட அரசு மதுபானக் கடை அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது மக்களை அதிருப்தி அடையவைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே மாா்வளா கைகாட்டி பகுதியில் அரசு மதுபானக் கடை 2017 மே 5ஆம் தேதி திறக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல்வேறு மனுக்கள் அளித்தும் எந்தவித பலனும் இல்லாததால் ஆவேசமடைந்த மக்கள் மதுக்கடையை அடித்து உடைத்து மதுபாட்டில்களை வெளியே வீசி போராட்டம் நடத்தினா். இதில் 37 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு கைது செய்தனா். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் நீதிமன்றம் 37 பேரையும் கடந்த சில நாள்களுக்கு முன் விடுவித்தது.
இந்நிலையில், அதே பகுதியில் மீண்டும் அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மதுப்பிரியா்கள் அங்குள்ள பேருந்து நிறுத்தம், சாலையோரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து வீசி செல்வது தொடா்வதால் பொதுமக்கள், பெண்கள் அச்சத்துக்கு உள்ளாகியுள்ளனா்.
எனவே , மாவட்ட நிா்வாகம் உடனடியாக இந்த மதுக்கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

