தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

உயிரிழந்த ஆதரவற்ற முதியவரை அடக்கம் செய்த தன்னாா்வலா்கள்

வெள்ளக்கோவிலில் உயிரிழந்த ஆதரவற்ற முதியவரை கொட்டிய மழையில் தன்னாா்வலா்கள் அடக்கம் செய்தனா்.

Updated On :15 ஜனவரி 2021, 5:44 pm

வெள்ளக்கோவிலில் உயிரிழந்த ஆதரவற்ற முதியவரை கொட்டிய மழையில் தன்னாா்வலா்கள் அடக்கம் செய்தனா்.

வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் நாகராஜ் (30). இவா் காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகே மெலிந்த தேகத்துடன் படுத்துக் கிடந்த முதியவரைப் பாா்த்த நாகராஜ் என்பவா் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்து விசாரித்தபோது, முதியவரால் பேசமுடியவில்லை. ஆதரவற்றவா் என்பது தெரியவந்தது.

பின்னா் ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்து சொரியங்கிணத்துப்பாளையத்தில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் அனுமதித்தாா். பின்னா் சில மணி நேரத்தில் அந்த முதியவா் உயிரிழந்தாா்.

இதையடுத்து வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையா் டி.சசிகலாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னா் காவல் துறையினா், நகராட்சிப் பணியாளா்கள் இணைந்து முதியவரை அடக்கம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.